
நெல்லிக்காய், ரோஜா இத்ழ்கள், தேன், கல்கண்டு, சேர்த்து குல்கந்து செய்து சாப்பிட்டால் இரும்பு சத்து கிடைக்கும்.
குழந்தை வளர்ச்சிக்கும் மார்பக மற்றும் கர்ப்பப்பை விரிவடைய புரதச்சத்து மிகவும் ஆவசியம். ஆகையால் உணவில் அதிகமாக பால், முட்டை, சீஸ், பயறு சேர்க்கவும்.
இருப்புச்சத்து நிறைந்த மருத்துவர் கொடுக்கும் மாத்திரைகளை 5வது மாதத்தில் இருந்து எடுக்கவும்.
அதிகமாக பச்சை காய்கறிகள், பழங்கள் கீரைகள், ஈரல் சேர்க்கவும்.
நிறைய தண்ணீர் குடிக்கவும்.
அதிக காரமான உணவுகள், எண்ணெய் பண்டங்கள் அதிகம் சாப்பிட வேண்டாம்.
உணவுகள் அதிகம் சூடு இல்லாமல் சாப்பிடவும்.
மலசிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்லவும்.
மனச்சோர்வுடன் இருந்தால் உடலில் சுரக்கும் சில சுரப்பிகள் சரியாக செய்யல்படாமல் போய்விடும். இதனால் பிறக்கும் குழந்தைக்கு எடை கம்மியாக பிறக்க வாய்ப்பிருக்கு. ஆகையால் எப்போதும் கலகலப்பாக இருங்கள்.
தினசரி சிறிது நேரம் மருத்துவரின் ஆலோசனையின் படி உடற்பயிற்ச்சி செய்யவும்.
முடிந்த வரை நிறைய நேரம் ஓய்வெடுங்கள்.
வயிற்றை காய போடாமல் 2 மணினேரத்துக்கு ஒரு முறை சாப்பிடவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக