திங்கள், 16 ஜூன், 2014

பெற்றோர்களே! குழந்தைகளை அடிக்கவோ திட்டவோ வேண்டாமே!!!



பெற்றோர்களே! குழந்தைகளை அடிக்கவோ திட்டவோ வேண்டாமே!!!

 
இன்றைய காலத்தில் குறும்பு செய்யாத குழந்தைகளை பார்க்கவே முடியாது. அவ்வாறு குறும்பு செய்யவில்லையென்றால் வீடே வெறிச்சோடி இருப்பது போல் இருக்கும். ஆனால் நிறைய பெற்றோர்கள் குழந்தைகளை அதிகம் எதையும் செய்யவிடாமல் தடுக்க முயற்சிக்கின்றனர். ஏனெனில் அவர்கள் எதாவது செய்ய போய், உடல் நலத்திற்கு ஏதேனும் நோய் வந்துவிடுமோ என்ற பயம் தான். அதற்காக சிறுவயதிலிருந்தே அவர்களை கட்டுப்பாட்டுடன் வைப்பதற்கு, அவர்கள் ஏதேனும் குறும்போ அல்லது தவறு செய்து விட்டால், உடனே அவர்களை அடிப்பார்கள். ஏனெனில் அவர்கள் இன்னும் நமது முன்னோர்கள் சொன்ன பழமொழியான “ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையாது” என்பது தான்.

why you should not beat your kids

அதாவது குழந்தைகளை சிறு வயதிலேயே திருத்தாவிட்டால், அந்த பழக்கம் அவர்களிடமிருந்து மாறாமல் இருக்கும் என்பதற்காக, அவர்களை அடிக்கின்றனர். அவ்வாறு அடிக்கும் பெற்றோர்கள் கொஞ்சம் கூட குழந்தைகளது மனதை புரிந்து கொள்ளாதவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் குழந்தைகளை அடித்தால், அவர்கள் பிற்காலத்தில் எவ்வாறு கெட்டவர்களாக மாறுவார்கள் என்பது பற்றி புரியாமல் இருக்கின்றனர். ஆகவே அத்தகைய பெற்றோர்களுக்கு குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ என்னவெல்லம் நடக்கும் வாய்ப்பு உள்ளது என்பதைப் பற்றி சற்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்…


* குழந்தைகள் ஏதேனும் தவறு செய்துவிட்டால், அவர்களை அப்போது அடித்தால், அவர்கள் சுபாவம் மிகவும் கடுமையாகிவிடும். அதாவது யாரிடமும் சரியாக பேசாமல், அப்படி யாராவது பேசினால் சிடுசிடுவென்று பேசுவது என்பன போன்ற செயல்களில் நடக்க ஆரம்பித்துவிடுவார்கள். மேலும் இந்த சுபாவம் வருவதற்கு வேறு யாரும் காரணம் இல்லை, பெற்றோர்கள் தான். ஆமாம், அவர்கள் தவறு செய்யும் போது அதை அவர்களிடம் பொறுமையாக எடுத்துச் சொல்லி புரிய வைக்காமல், உடனே அடிப்பது, திட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால், அவர்கள் மனதில் அந்த பழக்கம் பழகி, பின் அவர்களும் அவ்வாறே நடக்க ஆரம்பிப்பார்கள்.

* குழந்தைகளை அடித்தால் மட்டும் குழந்தைகளுக்கு நல்ல பழக்கம் வரும் என்று நினைப்பதை முதலில் மனதில் இருந்து பெற்றோர்கள் நீக்க வேண்டும். ஏனெனில் இவற்றால் அவர்கள் மிகவும் பிடிவாத குணமுள்ளவர்களாக மாறும் நிலைக்கு வந்துவிடுவர். அதிலும் குழந்தைகள் தவறு செய்து, பெற்றோர்கள் கடும் தண்டனையை குழந்தைகளுக்கு எப்போதும் கொடுத்தால், அவர்கள் அந்த தவறை மறுபடியும் செய்வர். அவற்றால் சில குழந்தைகள் பல கெட்ட பழக்கங்களையும் பழகிக் கொள்வர். ஆனால் அதையே பக்குவமாக சொல்லி புரிய வைத்துப் பாருங்கள், குழந்தைகள் புரிந்து கொண்டு எந்த நேரத்திலும் அந்த செயலை மறுமுறை செய்யாமல் இருப்பர்.

* குழந்தைகளுக்கு கடுமையாக தண்டனையை கொடுத்தால், பின் குழந்தைகளது மனதில் பெற்றோருக்கு தம் மீது அக்கறை, பாசம் எதுவுமில்லை என்று நினைத்து, தவறான பாதையில் வேண்டுமென்றே செல்ல ஆரம்பிப்பார்கள். சிறிது காலத்தில் குழந்தைகள் பெற்றோரிடம் பேசுவதையே நிறுத்திவிடுவர். பின் அவர்கள் தனிமையிலேயே இருந்து, தனக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் கூட பெற்றோரிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பர். பின் அவர்கள் சிறு வயதிலேயே மன அழுத்தத்திற்கு பாதிக்கப்படுவார்கள்.

* சிலசமயங்களில் குழந்தைகளுக்கு பெற்றோர்களின் செயல்களால், குழந்தைகள் வீட்டிலும் சரி, பள்ளியிலும் சரி, சோம்பேறித்தனத்துடன், எதையும் சரியாக செய்யாமல், சாப்பிடுவது, தூங்குவது போன்றவற்றை மட்டும் செய்வார்கள். குழந்தைகள் என்றால் நன்கு சுறுசுறுப்போடு விளையாட வேண்டும். அதை விட்டுவிட்டு சோம்பேறித்தனத்தோடு இருந்தால், உடல் எடை அதிகரித்து, பின் அவஸ்தைக்குள்ளாக நேரிடும்.

ஆகவே பெற்றோர்களே! இனிமேல் குழந்தைகளை அடிக்காமல், திட்டாமல், அவர்களிடம் அவர்களது தவறை எடுத்துச் சொல்லி புரிய வைத்தால், அதைப் புரிந்து கொண்டு நடந்து கொள்வார்கள். முக்கியமாக அடித்தால் தான் குழந்தைகள் திருந்துவார்கள் என்ற தவறான எண்ணத்தை பெற்றோர்கள் தங்கள் மனதில் இருந்து அழித்துவிட்டால், குழந்தைக்கும் பெற்றோருக்கும் உள்ள உறவு ஆரோக்கியமானதாக இருக்கும்.

“விரைவில் கர்ப்பமாக ஆசையா? அப்ப இப்படி முயற்சி செய்யுங்க…”



“விரைவில் கர்ப்பமாக ஆசையா? அப்ப இப்படி முயற்சி செய்யுங்க…”

 
tamil health tips :திருமணம் ஆன பின்பு, குழந்தை பெற முயற்சிக்கும் போது சில சமயங்களில் தோல்வியை சந்திக்கலாம். இதற்கு பெரும் காரணம், கர்ப்பமாவதற்கு முன் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது பற்றி சரியாக தெரியாததே ஆகும். மேலும் பெரும்பாலானோர் திருமணத்திற்கு பின், சீக்கிரம் கர்ப்பமாக வேண்டுமென்று திருமணமான முதல் இரண்டு மாதங்களிலேயே முயற்சி செய்வார்கள். ஆனால் இவ்வாறு முயற்சிப்பதை விட, இரண்டு மாதவிடாய் சுழற்சியானது முடிந்த பின்னர், கருத்தரிக்க முயற்சிப்பது சிறந்த பலனைத் தரும். மேலும் இந்த செயலால், கருத்தரிப்பதில் ஏதேனும் பிரச்சனை இருந்தாலும் நன்கு தெரிந்து கொள்வதோடு, அதனை சரிசெய்தும் கருத்தரிக்க முடியும். இல்லையெனில், கீழே கொடுக்கப்பட்டுள்ள சில செயல்களை பின்பற்றுவதன் மூலமும் எளிதில் கருத்தரிக்கலாம்.
பொதுவாக எளிதில் கருத்தரிப்பதற்கு சில கருவிகள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களின் மூலம் எளிதில் கருத்தரிக்கலாம். உதாரணமாக, ஓவுலேசன் ஸ்ட்ரிப் (ovulation strips) மற்றும் ஓவுலேசன் காலெண்டர் (ovulation calendars) போன்ற கருவிகளின் உதவியால் எளிதில் கருத்தரிக்க முடியும். எப்படியெனில், இவை எப்போது கருத்தரிக்க முயற்சித்தால் எளிதில் கர்ப்பமாக முடியும் என்பதை சொல்லும். மேலும் வாழ்க்கை முறை மாற்றங்களில் புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினால், விரைவில் கர்ப்பமாகலாம்.
இப்போது விரைவில் கர்ப்பமாக எந்த மாதிரியான விஷயங்களை பின்பற்ற வேண்டும் என்பதைப் பார்ப்போம்.
எடையில் கட்டுப்பாடு
கர்ப்பமாக நினைக்கும் போது உடல் எடையில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் எடை அதிகமாக இருந்தால், கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படும்.
உடற்பயிற்சி
சில எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலமும் கருத்தரிக்க முடியும். எப்படியெனில் உடற்பயிற்சியினால் தசைகள் தளர்வதோடு, ஹார்மோன்களும் சீராக இயங்கும். முக்கியமாக, உடற்பயிற்சியை மேற்கொள்ளும் போது, கருப்பைக்கு அதிகமான அழுத்தம் கொடுக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஓவுலேசன் காலெண்டர்
ஓவுலேசன் காலெண்டரைப் பயன்படுத்தினால், எந்த காலத்தில் உறவு கொண்டால், கருத்தரிக்கலாம் என்பதை நன்கு தெரிந்து, அதற்கேற்றாற் போல் செயல்பட்டு, எளிதில் கருத்தரிக்கலாம்.
ஓவுலேசன் ஸ்ட்ரிப்
ஓவுலேசன் ஸ்ட்ரிப் என்பது ஒரு கருவி. இதனை பிறப்புறுப்பில் நுழைத்து 1 நிமிடம் கழித்து எடுத்துப் பார்க்கும் போது, சிவப்பு நிறத்தில் கோடுகள் தெரிந்தால், இது உறவு கொள்வதற்கான சரியான நேரம் என்றும், இந்த நிலையில் உறவு கொண்டால், எளிதில் கருத்தரிக்கலாம் என்றும் அர்த்தம்.
புகைப்பிடித்தலை நிறுத்துதல்
அதிகமாக புகைப்பிடித்தால், குழந்தை இடம் மாறும் பிரசவத்திற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. மேலும் இதைப் பிடிப்பதால், சில சமயங்களில் மலட்டுத்தன்மை கூட ஏற்படும். எனவே கருத்தரிக்க ஆசைப்பட்டால், ஒரு வருடத்திற்கு முன்பிருந்தே புகைப்பிடித்தலை அறவே தவிர்த்துவிட வேண்டும்.
கருத்தரிக்க உதவும் உணவுகள்
சில உணவுகளை சாப்பிட்டால், அவை கருத்தரிக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கும். அதிலும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசி மற்றும் பால் பொருட்களை பெண்கள் சாப்பிட்டால், அவை எளிதில் கருத்தரிக்க உதவியாக இருக்கும்.
விந்தணுவின் எண்ணிக்கை
கருத்தரிக்க முயற்சிக்கும் போது, துணையின் விந்தணுவை அதிகரிக்கும் வகையில், துணைக்கு ஜிங்க் நிறைந்த உணவுகளை அதிகம் கொடுக்க வேண்டும். மேலும் அவர்களை புகைப்பிடிக்கவோ, மது அருந்தவோ அனுமதிக்காமல், தினந்தோறும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வைக்க வேண்டும்.
ஈரமான நாட்கள்
சில சமயங்களில் பிறப்புறுப்பில் அதிகப்படியான ஈரத்தை உணர நேரிடும். பொதுவாக பாதுகாப்பற்ற நாட்களில் கர்ப்பப்பையின் வாயிலிருந்து அதிகப்படியான சளியானது சுரக்கப்படும். இத்தகைய ஈரப்பதத்தை உணர்ந்தால், அது கருத்தரிக்க வேண்டுமெனில், முயற்சிக்க வேண்டிய காலம் என்பதற்கான ஒரு அறிகுறியாகும்.
மன அழுத்தத்தை குறைக்கவும்
கர்ப்பமாவதற்கு தடையை ஏற்படுத்துவதில் மன அழுத்தம் முக்கிய பங்கினை வகிக்கிறது. எனவே கர்ப்பமாக வேண்டுமெனில், மன அழுத்தத்தைக் குறைக்க முயற்சிக்க வேண்டும். அதற்கு யோகா, தியானம் போன்றவற்றை பின்பற்ற வேண்டும்.
மருத்துவரை அணுகவும்
மேற்கூறிய அனைத்து செயல்களையும் மேற்கொண்ட பின்னரும் கருத்தரிக்க முடியவில்லையெனில், உடனே மருத்துவரை அணுகி, தேவையான பரிசோதனைகளை மேற்கொண்டு, பிரச்சனை இருந்தால் சரிசெய்ய முயல வேண்டும்.

படுக்கையில் சொர்க்கத்தை காண வேண்டுமா??


படுக்கையில் சொர்க்கத்தை காண வேண்டுமா??

 
நிறைய பேருக்கு இந்தக் கவலை இருக்கும். படுக்கை அறையில் என்னால் நீண்ட நேரம் இன்பம் அனுபவிக்க முடியவில்லை, மனைவியை நீண்ட நேரம் திருப்திப்படுத்த முடியவில்லை, என்னால் முடியவில்லையே என்று பலரும் வருந்திக் கொள்வார்கள் – உள்ளுக்குள். கவலைய விடுங்க, உங்க கிட்டேயே இதற்கான வைத்தியம் இருக்கு. அதைப் பார்ப்போம் வாருங்கள்…
உச்சகட்டம் எனப்படும் கிளைமேக்ஸை அடைவதற்கு முன்பே சில தந்திரங்களை நாம் பயன்படுத்தினால் நீடித்த இன்பத்தை எளிதில் அடைய முடியும். இதற்காக மருத்துவர்களிடமோ, வயகாரா போன்ற மருந்துகளிடமோ நாம் தஞ்சம் புகத் தேவையில்லை. நிறுத்துங்கள் – தொடருங்கள் – நிறுத்துங்கள் இது ஒரு டெக்னிக். அதாவது உறவை ஆரம்பித்து மும்முரமாக போய்க் கொண்டிருக்கும்போது விந்தனு வெளியேறப் போவது போல தோன்றும்போது ஆண்குறியை வெளியே எடுத்து விடுங்கள். சில விநாடிகள் ஓய்வெடுங்கள். அதாவது 5 முதல் 10 விநாடிகள் வரை. இப்போது சற்று வேகம் குறைந்திருக்கும். பிறகு மீண்டும் உறவைத் தொடருங்கள்.
இப்படியே சில நிமிடங்கள் வரை செய்து வாருங்கள். இதன் மூலம் உங்களுக்கும் நீண்ட நேரம் உறவில் இருந்தது போல இருக்கும். உங்களது துணைக்கும் தேவையான இன்பம் கிடைக்கும். ஆண்களை விட பெண்களுக்கே உச்சகட்டம் வர நேரமாகும். எனவே இப்படி நிறுத்தி நிறுத்தி உறவு கொள்ளும்போது உங்களை விட உங்களது மனைவிக்குத்தான் நிறைய இன்பம் கிடைக்கும்.
பிசைந்து கொடுங்கள்…
அடுத்து இன்னொரு டெக்னிக் இருக்கு. அதாவது உறவின்போது உச்சகட்டம் வரும் போல தெரியும்போது ஆண்குறியை வெளியே எடுத்து விடுங்கள். பின்னர் ஆண்குறியின் பின்னால் உள்ள டியூப் போன்ற பகுதியை மெதுவாகப் பிடித்து பிசைந்து கொடுங்கள். அப்படிச் செய்யும்போது உணர்வு மட்டுப்படும், விந்தனு வெளியேறுவதை சற்றே தடுத்து நிறுத்தலாம். உணர்வு வெகுவாக குறைந்ததும் மறுபடியும் உறவைத் தொடருங்கள்.
உணர்ச்சிகளைத் தூண்டாத ஆணுறை…
இதேபோல இன்னும் ஒரு எளிமையான விஷயம், ஆணுறை. அதாவது சில ஆணுறைகள் உணர்ச்சிகளை அவ்வளவு சீக்கிரம் தூண்டுவதில்லை. அப்படிப்பட்ட ஆணுறைகளைப் பயன்படுத்திக் கொண்டு உறவில் ஈடுபடும்போது நீண்ட நேரம் ஈடுபட வாய்ப்பு கிடைக்கும். இந்த வகை ஆணுறைகளில்  பென்சோகெய்ன் என்ற லூப்ரிகன்ட் பயன்படுத்தப்படுகிறது. இதனால் நீண்ட நேரம் உறவில் ஈடுபட்டாலும் கூட உணர்வுகள் உச்சகட்டத்தை அடைய சற்று அவகாசம் பிடிக்கும். நீண்ட நேர இன்பத்தை விரும்புவோருக்கு இந்த வகை ஆணுறைகள்தான் சரிப்பட்டு வரும்.
அதேசமயம், இப்படிப்பட்ட ஆணுறைகளை அணிவதற்கு முன்பு தலைகீழாக மாற்றி போட்டு விடாதீர்கள். பிறகு தவறாகப் போய், நீடித்த இன்பத்திற்குப் பதில், சுருக்கமாக முடிந்து போய் கசப்பாகி விடக் கூடும். இதுபோல நிறைய இருக்கிறது… அனுபவத்தின் மூலம் அறிந்து இன்பத்தை நுகருங்கள்…!