செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

ஆண் குழந்தையை பெற விரும்பும் பெண்கள் உட்கொள்ள‍ வேண்டிய‌ உணவுகள

ஆண் குழந்தையை பெற விரும்பும் பெண்கள் உட்கொள்ள‍ வேண்டிய‌ உணவுகள

ஆண் குழந்தைக்கு ஆசைப்படாத பெண்கள் யார்தான் இல்லை? அப்படி ஆண் குழந்தை பெற விரும்பும் பெண்கள், கர்ப்ப காலத்தின் துவக்கத் தில் அவசியம் காலை உணவை உட் கொள்ள வேண்டும் என்று கூறுகிறது சமீபத்திய மருத்துவ ஆய்வு ஒன்று!
கர்ப்பம் உறுதிபடுத்தப்பட்ட பின்னர் பெண்களுக்கு இயல்பாகவே வரும் மசக்கை மற்றும் வாந்தி போன்ற வை, சில பெண்களுக்கு உணவின் மீதே வெறுப்பை ஏற்படுத்தி விடும். ஆனால் குழந்தை – அதுவும் ஆண் குழந்தையாக – பெற்றுக் கொள் ள வேண்டும் என்ற ஆசை மட்டும் ஆகாசம் வரை இருக்கும். பொது வாகவே கர்ப்பம் தரித்திருக்கும் பெண்கள் நல்ல சத்தான் உணவை வேளை தவறாமல் உண்ண வேண்டும்; அதுவும் சிறிது சிறிதாக ஐந்து வேளை வரை உட்கொள்ளலாம் என்றெல்லாம் அறிவுறுத்து கின் றனர் மகப்பேறு மருத்துவர்கள்.
இந்நிலையில், கர்ப்ப காலத்தின் தொடக்கத்தில் ஒரு பெண் உட் கொள்ளும் உணவின் தன்மைதான் அவளது குழந்தை ஆணாக உருவா குமா அல்லது பெண்ணாக உருவா குமா என்பதையும், அந்த குழந்தை யின் ஆரோக்கியத்தையும் தீர்மானி க்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்!
இது தொடர்பாக அண்மையில் கொலம்பியாவில் உள்ள மிஸ் ஸோரி பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், ஒரு பெண் கர்ப்ப காலத் தின் தொடக்கத்தில் காலை உண வை தவறாமல் உட்கொள்வதோடு, நல்ல கொழுப்பு சத்தான ஆகா ரத்தையும் எடுத்துக்கொண்டால் ஆண் குழந்தை பிறக்க மிகப் பிரகாசமான வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது. அதுவே குறைந்த கொழுப்பு சத்துடைய உணவையும், உணவு இடைவே ளையை நீண்ட நேரமாக வைத்துக்கொள்ளும் பெண்க ளுக்கு பெண் குழந்தை பிறக் க வாய்ப்புள்ளதாகவும் கூறு கிறார்கள் அந்த ஆய்வை மேற்கொண்ட மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.
சரி ஆண்குழந்தைக்காக இத் தனை தூரம் ஆராய்ச்சியெல் லாம் மேற்கொண்டவர்கள், பெண் குழந்தைதான் வேண்டும் என்று அடமாக ஆசை கொள்ளும் பெண் களுக்காக இதுபோன்ற ஆராய் ச்சியெல்லாம் மேற்கொள்ளவில் லையா என்று கேட்டால், அதற் கும் “உள்ளேன் ஐயா!” என்று ஆஜ ராகிறார்கள் ஹாலந்தின் மாஸ் ட்ரிக்ட் பல்கலைக் கழக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்!
இவர்கள் மேற்கொண்ட ஆய்வி ல், கர்ப்ப காலத்தில் பெண்கள் வாழைப்பழம் உண்பதை நிறுத்தி, உப்பு சேர்ப்பதை குறைத்துக் கொ ண்டால் பெண் குழந்தை பிறக்க பிரகாசமான வாய்ப்பு உள்ள தாக தெரியவந்துள்ளது. குறிப்பாக சோடியம், பொட்டாசியம் அதிக ம் உள்ள இறால், அரிசி உணவு கள், உருளைக் கிழங்கு, பிரட் போ ன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும்.அவற்றுக்குப் பதிலாக கால் சியம் மற்றும் மக்னீசியம் சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவு களை உட்கொள்ளலாம் என பரிந்துரைக்க்கிறார்கள் மாஸ்ட்ரிக்ட் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள்.
இவர்கள் கூறுவதை, கொலம்பிய பல்கலைக் கழக ஆராய்ச்சியா ளர்கள் கூறியவற்றுடன் – அதா வது கொழுப்பு சத்து குறைந்த உணவை உட்கொள்ளும் கர்ப் பிணி பெண்களுக்கு பெண் குழந்தை பிறக்க அதிக வாய்ப் புள்ளது என்று தெரிவித்ததோ டு – ஒப்பிட்டு பார்க்கையில் நம்பகத்தன்மை மேலும் அதி கரிப்பதாகவே தோன்று கிறது.
ஆனால் இந்த ஆராய்ச்சி, ஆய்வு எல்லாம் இன்ன குழந்தைதான் வேண்டும் என்று அடம் பிடிப் பவர்களுக்குத்தான்…! ஆண் குழந்தையோ அல்லது பெண் குழந்தையோ, ஒரு தாய்க்கு எந்த குழந்தையுமே அவள் குழந் தைதானே?!

அரச மரத்தின் சிறப்பு

பெண்களின் பிரச்சனை தீர்க்கும் அரசமரம்

அரச மரத்தின் காற்று கருப்பை கோளாறுகளை போக்கும் தன்மையுடையது. அதுபோல் மூளையின் செயல்பாடுகளை தூண்டி, மன அமைதியைக் கொடுக்கும் குணமும் இதற்கு உண்டு.

• அரசமரத்தின் பட்டை, வேர், விதை இவற்றை பாலில் கொதிக்கவைத்து ஆறிய பின் அதில் தேன் கலந்து தொடர்ந்து 48 நாட்கள் ( 1 மண்டலம் ) அருந்தி வந்தால் தாது விருத்தியடையும். பெண்களுக்கு கருப்பைக் கோளாறுகள் நீங்கும்.

• அரச மரத்தின் இலையை, பட்டை, வேர், விதை இவற்றை இடித்துபொடியாக்கி வைத்துக்கொண்டு மாதவிலக்குக் காலங்களில் கஷாயம் செய்து அருந்தி வந்தால் மாதவிலக்கில் ஏற்படும் பிரச்சனைகள் தீரும். கருப்பைக் கோளாறுகள் நீங்கும்.

• வெள்ளைப்படுதல் நோய் கொண்ட பெண்கள் இந்த நீரால் பிறப்புறுப்பை கழுவி வந்தால் வெள்ளைப்படுதல் நோய் குணமாகும். அதனால் ஏற்படும் மற்ற பாதிப்புகள் குறையும்.

• அரச இலை, மாவிலை, நாவல் இலை, அத்தி இலை இவற்றைச் சம பங்கு எடுத்து நீர்விட்டுக் காய்ச்சி வடிகட்டி குடித்துவர பெண்களுக்க மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கு கட்டுப்படும்.

கருத்தரிக்கும் நாட்களை அறிதல்

1. தேதிகொண்டு அறியமுடியும் - மாதவிலக்கு சுழற்சி ஆன முதல் நாள், நாள் ஒன்று என்று கணக்கில் கொண்டு கணக்கிட வேண்டும். பொதுவாக மாதவிலக்கு சுழற்சியானது 28-30 நாட்களுக்கு ஒருமுறை ஏற்படும். மாதவிலக்கு ஒழுங்கில்லாத மகளிருக்கு இது மாறுபட்டு இருக்கும். மாத விலக்கு ஒழுங்கில்லாத மகளிருக்கு இந்த முறையில் கருத்தரிக்கும் காலத்தை கணக்கிடுவது கடினம். மாதவிலக்கு சுழற்சி 28-30 நாட்கள் உள்ளவர்களுக்கு மாதவிலக்கு ஏற்பட்டு 12 முதல் 16 நாட்களுக்குள் கர்ப்பம்தரிக்கும் வாய்ப்பு அதிகம்.
2. யோனிக்கசிவு அதிகரித்து காணும் - யோனிக்கசிவு (Vaginal secretions) கருமுட்டை வளர்ச்சிமுழுமையானதாக ஆனபின்பு அது விந்தணுவுடன் சேரும் காலம் யோனிக் கசிவுஅதிகம் காணப்படும். இதனை வைத்து கருத்தரிக்கும் காலத்தை கணக்கிடலாம். கருத்தரிக்கும் காலம் அறிந்த பின்பு உறவு கொண்டால் விந்தணு கருப்பையினுள் எளிதாக ஊர்ந்து சென்று சினை முட்டையுடன் இணைய யோனிக்கசிவு உதவி செய்கிறது.
 
3. காமக்கிளர்ச்சியின்போது Progesterone என்னும் ஹார்மோன் அதிகமாக சுரப்பதால் உடல் வெப்பம் 0.30இ அளவு உயர்கிறது. இதை வைத்து கருவுற ஏற்ற காலத்தை அறிந்துகொள்ளலாம். 12 முதல் 16ம் நாளுக்குள் கருப்பையின் உட்சுவர்கள், கனத்து, தடித்து கருவை ஏற்கக்கூடிய நிலையில் இருக்கும். இக்காலங்களின் நோயின் தாக்குதல் இல்லாமலும், மனச்சிக்கல் இல்லாமலும் உறவு கொண்டால் கரு உருவாகும் வாய்ப்புகள் கூடும்.